Thursday, May 20, 2010

Puriyadha Pudhir

புரியாத புதிர்

பெண்ணே...
மென்மையாக இருக்கும்
உன்னால் தான்
முட்களாய் கீறி
இதயத்தை
ரணமாக்க முடிகிறது.

பரிவுகள்
பரிதவிப்புகளை
பிரதிபலிக்கத் தெரிந்த
உன்னால் தான்
பாராமுகம்
காட்டவும் முடிகிறது.

முழுமதியை
முகத்தில் நிறைத்திருக்கும்
உன்னால் தான்
எரிமலையையும்
அவ்வப்போது
ஏவிவிட முடிகிறது.

ஆதிக்கத்திற்கெதிராய்
அறைகூவல் விடுக்கும்
உன்னால் தான்
ஆண்வர்க்கத்தை
ஆட்டுவிக்க முடிகிறது.

உணர்ச்சிகளுக்கு
உருக் கொடுக்கத் தெரிந்த
உன்னால் தான்
உள்ளத் தொடர்பின்றி
உதடுகளாலும்
பேச முடிகிறது.

அன்புச் சிறகில்
அரவணைக்க முடிந்த
உன்னால் தான்
அரக்கத்தனத்தையும்
அவிழ்த்துவிட முடிகிறது.

பெண்ணே...
ஏனின்னும் நீ
விடியாப் பொழுதாய்
விளையாக் கதிராய்
முடியாத் தொடராய்
புரியா புதிராய்?

No comments:

Post a Comment